Tue. May 21st, 2024

இந்திய மீனவர்கள் அத்துமீறல் பருத்தித்துறை மீனவர்கள் வலைகள் நாசம்

இந்திய மீனவர்கள் அத்துமீறி கடலில் உள்நுளைந்ததனால் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளதாத வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி பருத்தித்துறை கடல் பகுதியில் நேற்று முன்தினம் அப்பகுதி மீனவர்களால் வலைகளை கடலில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தமது வலைகளில் மீன்களை எடுப்பதற்காக படகுகளில் சென்று தேடியபோது பலரது வலைகள் காணாமல் போயுள்ளதுடன் பலரது வலைகள் வெட்டப்பட்டும் துண்டாடப்பட்டும் காணப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தலா மூன்றரை இலட்சம் பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவம் பல தடவைகள் இடம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் பல தவைகள் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் கடன் பட்டு வலைகளை கொள்வனவு செய்து தொழிலிற்குச் சென்றுவந்த நிலையில் இன்று  இவ்வாறு வலைகள் வெட்டப்பட்டு நாசம் செயவயப்பட்டதுடன் பலரது வலைகளும் காணாமல் போயுள்ளன..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்