கொரோனாவால் 97 பேர் மரணம் திடுக்கிடும் தகவல்
நேற்றைய தினம் நாட்டில் 97 கொரோனா தொற்றாளர்கள் இறந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 4821 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் இறந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.