Tue. May 14th, 2024

கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழ் மாவட்டத்தில் இன்று  கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் குருநகரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் 3 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்