வடமாணத்தில் 137 பேருக்கு தொற்று ஒரே பார்வையில்
வடமாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
நேற்று 937 பேருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 95 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருவருக்கும் ஒட்டுசுட்டான் சுகாதார பிரிவில் இருவரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா சுகாதார பிரிவில் நால்வருக்கும், வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுவோருக்கும், நேரடி தொடர்புடையவர்களுக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் யாழ் வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மூவருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் மூவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவில் கரவெட்டி சுகாதார பிரிவில் 36 பேருக்கும், தெல்லிப்பளை சுகாதார பிரிவில் பலாலி அந்தோனிபுரம் கிராமத்தில் 17 பேருக்கும், யாழ் சுகாதார பிரிவில் 15 பேருக்கும், சங்கானை சுகாதார பிரிவில் 6 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் இருவருக்கும் என தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.