கொடிகாமம் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் உட்பட 35 பேருக்கு தொற்று உறுதி
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கொடிகாமம் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மூவர் மற்றும் சாவகச்சேரி நகரசபை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இன்று 161 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.