Fri. May 17th, 2024

கிளிநொச்சி விபத்தில் 7 பேர் மணலில் புதையுண்டு காயம்

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மண்ணில் புதையுண்ட  7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஏ9 பாதையூடாக கிளிநொச்சி கொக்காவில் வீதியில் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் தடம்புரண்டது. இதில் பயணித்த சாரதி உட்பட 7 பேரும் மணலில் மூடப்பட்டு விபத்திற்கு உள்ளாகினர்.
வீதியால் பயணித்தோரால் அவதானிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு வைத்தியசாலைக்க அனுப்பப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்