Fri. May 17th, 2024

நேற்று நாடு முழுவதும் மொத்தம் 84,565 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது

இலங்கையில் நேற்றய தினம் திங்கள்கிழமை (மே 31) ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் வழங்கப்படுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
அதன்படி, மொத்தம் 84,565 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் வழங்கப்படுள்ளதாக உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்து தயாரிப்பு அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமனா தெரிவித்தார் .

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகள் 72,887 பேருக்கும் , 10,157 பேருக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியும் வழங்கப்பட்டது என்று தொற்றுநோயியல் பிரிவின் கோவிட் -19 நோய்த்தடுப்பு முன்னேற்ற அறிக்கை தெரிவித்தது

 

இதற்கு மேல் , ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மொத்தம் 1,521 பேருக்கு வழங்கப்பட்டது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கை தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து 347,310 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்