அல்வாய் வடமேற்கு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவினருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவான அல்வாய் வடமேற்கு பகுதியினரும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். அல்வாய் வடமேற்கு கிராம அலுவலர் பிரிவினருக்கும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை திக்கம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த தினத்தை தவறவிடுவோருக்கான தடுப்பூசி ஏற்றுவதில் சிரமம் ஏற்படும் என அறியமுடிகிறது.