இன்று நாடு முழுவதும் 2882 பேருக்கு கோரோனோ தொற்று
இலங்கையில் COVID-19 க்கு 2882 பேர் இன்று தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக PCR பரிசோதனை மூலம் கண்டறியப்படுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 186,364 ஆக உள்ளது.
தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையில் 151,740 பேர் கோரோனோ தொற்றில் இருந்து மீண்டுள்ளதுடன் 1,298 பேர் இதற்கு பலியாகியுள்ளார்கள்
33,183 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தரவு தெரிவிக்கின்றது.