Thu. May 16th, 2024

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக கிராம அலுவலகர்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக கிராம அலுவலகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரவெட்டி பிரதேசத்தில் சிரேஷ்ட கிராம அலுவலராக கடமையாற்றிய எஸ்.வித்தியாபதி என்பரே கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக கிராம அலுவலகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடந்த 6 வருடங்களாக நிர்வாக கிராம அலுவலகராக கடமையாற்றிய கி.ரவிக்குமார் அவர்கள் நேற்று 30ம் திகதியுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து குறித்த பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1994ம் ஆண்டு முதல் 21 வருடங்களாக கிராம அலுவலராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம அலுவலர்கராக கடமையாற்றி, அதன் பின்னர் 2016 முதல் கரவெட்டி பிரதேச செயலத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம அலுவலராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்