கரவெட்டி தெற்கு, மாலைசந்தையான் முடிவுகள் இன்று வெளியாகும்
கரவெட்டி தெற்கு மற்றும் மாலைசந்தையான் ஆலயத்தில் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரவெட்டி தெற்கு பகுதியில் வளிமண்டல திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த உத்தியோகத்தர் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தினமும் தொண்டு செய்துள்ளார். இதனையடுத்து சமுகத் தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய நேற்று 174 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு வருகை தந்தோரின் பதிவு வைக்கப்பட்டதால் ஆலய நிர்வாகத்தினரும், கிராம மக்களும் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய பிசிஆர் பரிசோதனைக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.