Sun. May 19th, 2024

கரவெட்டியில் 40 பேருக்கு கொரோனா

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் இன்று  சனிக்கிழமை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லியடியில் உள்ள வெதுப்பகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 23ம் திகதி எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளே வெளியிடப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 14 பேருக்கும்,  உடுப்பிட்டி பொதுச்  சுகாதார பிரிவில் 8 பேருக்கும்,  நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்