பருத்தித்துறையில் தடுப்பூசிகள் ஏற்றும் நாளும் கிராம அலுவலகர் பிரிவும்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவினருக்கான கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
கொவிட் 19 தடுப்பு செயலணி கொண்ட குழுவினர் பருத்தித்துறை பகுதியில் 5 கிராம அலுவலகர் பிரிவுகளையும், கரவெட்டி பகுதியில் 5 கிராம அலுவலகர் பிரிவுகளையும் தெரிவு செய்து கிராம அலுவலகர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டவுள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனடிப்படையில் நாளை 8 மணி முதல் யா/வட இந்து மகளிர் கல்லூரியில் தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜே/401 கிராம அலுவலகர் பிரிவினருக்கும், திங்கட்கிழமை ஜே/402 கிராம அலுவலகர் பிரிவினருக்கும், செவ்வாய்க்கிழமை ஜே/405 கிராம அலுவலகர் பிரிவினருக்கும், புதன்கிழமை ஜே/408 கிராம அலுவலகர் பிரிவினருக்கும், வியாழக்கிழமை ஜே/409 கிராம அலுவலகர் பிரிவினருக்கும் வழங்கப்படவுள்ளது.