எழுதுமட்டுவாழ் பிரிவில் தடுப்பூசி ஏற்றும் கிராம அலுவலகர் பிரிவும் நாளும்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மிருசுவிலில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் காலை 8.30 இருந்து மாலை 4.30 வரை இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இத்தடுப்பூசி போடுவதற்கு தகுதியுடையவர்கள்.
இதன்படி திங்கட்கிழமை – மிருசுவில் வடக்கு, மிருசுவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவினருக்கும்,
செவ்வாய்க்கிழமை உசன் மற்றும் கரம்பகம் கிராம அலுவலர் பிரிவினருக்கும்,
புதன்கிழமை -கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவினருக்கும் வழங்கப்படவுள்ளது.