சட்டவிரோதமாக பொலிஸாருக்கு மதுபானம் விற்ற நபர் கைது
பயணத்தடை சமயத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்ற மானிப்பாய் நபர் குறித்து பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று சிவில் உடையில் அந்த வீட்டிற்கு பொலிசார் சென்ற பொழுது , பொலிஸாருக்கு சாராயம் விற்க முற்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார், மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.