Fri. May 17th, 2024

கன்றுத்தாச்சியை இறைச்சியாக்கிய கொடூரம்

வேலணை புளியங்கூடல் பகுதியில் மேய்ச்சல் தரவையில் கட்டி வளர்க்கப்பட்ட JC இன கன்றுத்தாச்சி மாடோன்றை இறைச்சியாக்கிய குற்றத்திற்காக பெண் ஒருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அல்லைப்பிட்டி பகுதியில் நடைபெற்றது. அல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த மாட்டுத்திருடர்களால் கடத்திச் செல்லப்பட்டு அல்லைப்பிட்டியில் உள்ள வீடொன்றில் இறைச்சியாக்கப்பட்ட நிலையில் வயிற்றில் உள்ள கன்றும் வெளியே போடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உபபரிசோதகா் விவேகானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது பிரதான சூத்திரதாரி தப்பியோடிய நிலையில் அவரது மனைவியை மாட்டு இறைச்சியுடன் கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனா். பிரதான சூத்திரதாரியான குறித்த நபருக்கு எதிராக வேலணை மண்கும்பான் பிரதேசங்களில் மாடுகளை திருடியதற்காக ஊர்காவற்றுறை நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்