கணவர் உயிரிழந்து ஒரு மாத காலமாகவுள்ள நிலையில் மனைவியும் தீமூட்டி உயிரிழப்பு
கணவர் உயிரிழந்து ஒரு மாத காலமாகவுள்ள நிலையில் மனைவியும் இறந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனக்குத் தானே தீ மூட்டி பெண் ஒருவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நாகலிங்கம் முதலியார் வீதி ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசராஜா ஜெகதா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரின் கணவர் கடந்த மாதம் இறந்துள்ள நிலையில் மன உளைச்சலுக்குள்ளாகிய நிலையில் தனக்குத் தானே தீமூட்டி இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.