கணபதி அறக்கட்டளை நிறுவனத்தால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
கணபதி அறக்கட்டளை மற்றும் GSHL
இணைந்து வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் இன்று துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் எஸ்.எஸ்.எஸ். ஆறுமுகலிங்கம் ஜெயசீலன் அவர்களின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கு இன்று துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அல்வாய் வடக்கு ஜெ/400 கிராம அலுவலகர் பிரிவில் ஒருவருக்கும்,
கரவெட்டி மேற்கு இராஐ கிராமம் மேற்கு ஜெ/363 கிராம அலுவலகர் பிரிவில் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த கிழமை யாழ் புத்தூர் , தெல்லிப்பளை தெற்கு மற்றும் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.