Sun. May 19th, 2024

ஐஸ் கிறீம் கடையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதியில் அமைதுள்ள பழமுதிர்சோலை ஐஸ்கிரீம்  கடையின் சமையல் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்திருந்தனர். இதனையடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்