Sun. May 19th, 2024

கரவெட்டி சுகாதார பிரிவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை

மருதனார்மடம் பகுதியில் கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புடைய மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கரவெட்டி சுகாதார பிரிவுக்கு உட்டோரை சுய தனிமைப்படுத்தி வைக்கும் செயற்பாடு பொதுச் சுகாதார பிரிவினரால் நடைபெற்று வருகின்றது. மருதனார்மடம் பகுதியில் கொரோனா தொற்று உள்ளவருடன் கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் அவரின் உறவினர் இருக்கின்றனர். அத்துடன் மருதனார்மடம் பகுதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் இனங் காணப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை சுய தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.  மேலும் இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்தால் அந்தந்தப் பகுதி சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்