உடுவில், தெல்லிப்பளை கோட்ட பாடசாலைகள் மூடு, அறிவித்தலை செவிமடுக்கவும்
உடுவில் கல்வி கோட்ட 33 பாடசாலைகள், தெல்லிப்பளை கோட்ட 40 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இதேவேளை உடுவில் பிரதேச செயலக எல்லைக்குள் வதியும் ஏனைய கோட்டம் மற்றும் வலயங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மறு அறிவித்தல் வரை சமூகமளிக்கத் தேவையில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ஏனைய வலயங்கள் மற்றும் கோட்டங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்டிருப்பின் அவர்கள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த அனைவரும் கொரோனா கொத்தணிக்கு கொண்டு செல்லாமல் பாதுகாக்கும் வண்ணம் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.