இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று வடமாகாணத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஐந்து பேர், ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் 7 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் இருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.