Fri. May 17th, 2024

இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று வடமாகாணத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  416பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய்  சிகிச்சை நிலையத்தில் ஐந்து பேர்,  ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் 7 பேருக்கும்  மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் இருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்