Sun. May 19th, 2024

இன்று மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இவர்கள் மூவரும் பொலீஸ் உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது. இன்று யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ ஆய்வு கூடத்தில் 413 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வவுனியாவைச் சேர்ந்த 3 பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை யாழ் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 314 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்