பளை அம்மன் ஆலயத்தில் பால் வடியும் காட்சி
பளைப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தின் வேப்பமரத்தில் இருந்து பால் வடியும் காட்சியை பார்க்க பல பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
அம்மன் ஆலய சூழலில் அமைந்துள்ள வேப்பரத்திலிருந்து தொடர்ந்து சில நாட்களாக பால் சொரிகின்றது. அம்மனுக்கு உகந்த தல விருட்சம் வேப்பமரம். கடந்த காலத்தில் இதே போன்று வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய சூழலிலும்
அமைந்திருந்த வேப்பமரத்திலிருந்து பால் சொரிந்தது யாவரும் கண்டு தொழுதனர்.அதே போல காட்சி தற்போது பளை ஆலயத்தில் நிகழ்கின்றன. இக்காட்சியை கண்டு இறைவனின் திருவருளை பெற்றுக்கொள்ள அடியவர் கூட்டம் படையெடுத்துள்ளனர்.