துன்னாலையில் கசிப்புடன் பெண் கைது
கரவெட்டி துன்னாலைப் பகுதியில் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துன்னாலை முனியப்பர் கோயிலடியில் தேடுதல் நடாத்திய போது ஆயிரத்து ஐந்நூறு லீற்ரர் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 45 வயதுடைய பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.