டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலினால் மாணவன் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது 11) சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பனடோல் போட்டு வைத்தியசாலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்னர் தொடர்ச்சியான வயிற்றுப் போக்கும்
வாந்திபேதியும் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.