ஒப்பனையாளர் சங்க காரியாலய கட்டடம் வடமராட்சியில்
வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் யாழ் மாவட்டத்திற்கான கிளைக் காரியாலயம் நேற்று வடமராட்சி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
நெல்லியடி J/376 கிராம அலுவலர் பாலசுப்பிரமணியம் வைகுந்தன், அமைப்பின் தலைவர் முருகுப்பிள்ளை ஜெயராசா மற்றும் நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் இரத்தினசபாபதி சுதேரஞ்சன் ஆகியோரால் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் உள்ள கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த குறித்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் இந்த அமைப்பினரால்
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மிக வறுமையான குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் அமைப்பின் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பில் இரண்டு பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும். பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.