தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்
தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் விருந்தினர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் சி.அனுசன், நல்லூர் பிரதேச செயலக பிரிவு இளைஞர் சேவை உத்தியோகத்தர் இ.யுகராஜ், யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் உப தலைவர் கி.நிரேஸ், தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான தே.வஜிந்தன் மற்றும் கி.கிஜிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்
இந் நிகழ்வின் போது தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 6 வருடங்களாக இளைஞர் சேவை உத்தியோகத்தராகக் கடைமையாற்றி நல்லூர் பிரதேசத்திற்கு மாற்றலாகிச் செல்லவிருக்கும் தெல்லிப்பழை இளைஞர் சேவை உத்தியோகத்தர் றொ.கௌதமி அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் மற்றும் புதிதாக கடமையேற்கவிருக்கும் உத்தியோகத்தர் இ.யுகராஜ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் தெல்லிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.