Sun. May 19th, 2024

கொழும்பு ஹோட்டலில் சிலிண்டர் வெடித்தது

கொழும்பு ரேஸ்கோஸில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் உள்ள பாரிய கட்டடமொன்றில் இன்று காலை சிலிண்டர் வெட்டித்ததில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்