Wed. Apr 24th, 2024

தேசிய கூடைப்பந்தாட்டம் யாழ் மாவட்ட இளைஞர் அணி சம்பியன்

33வது தேசிய மட்ட இளைஞர் மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ் மாவட்ட இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் இன்று  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்கா கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து ஹம்பகா மாவட்ட இளைஞர் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய யாழ் மாவட்ட இளைஞர் அணி 72:55 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்