இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்
லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
16 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே கையிருப்பு உள்ள நிலையில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை 2ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு வரவுள்ளது. அப்படி வந்தால் மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.