Sat. May 18th, 2024

O/L பரீட்சை எதிர்வரும் 2 முதல் பதின்மூன்று  நாட்கள் நடைபெறவுள்ளது. 

கல்வி பொதுத் தராதரப் பரீட்சை எதிர்வரும் 2ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் பரீட்சை நாடு பூராகவும் 1987 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இப் பரீட்சை நிலையங்களில் 7லட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்சை திணைக்களத்தால் வழங்கப்பட்ட பரீட்சை அனுமதி பத்திரத்துடன் தேசிய அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்கள் இல்லாதவிடத்து ஆள்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்