துன்னாலையில் கசிப்பு பிடிக்க சென்ற பொலிஸாரை சுற்றிவளைத்த மக்கள், ஒருவர் கைது
துன்னாலை கிழக்கு முனியப்பர் கோயில் அடி பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று இரவு 7 மணி அளவில் துன்னாலை பகுதிக்கு நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கு அமைய இரண்டு பொலிசார் சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்தவேளை அந்த வீட்டிலுள்ளவர்கள் இருவரையும் சுற்றிவளைத்து உள்ளார்கள். இதனால் பதட்டம் அடைந்த போலீசார் நெல்லியடி பொலிஸ் அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொறுப்பதி காரி உட்பட மேலும் பலர் அவ்விடத்திற்கு சென்று ‘சுற்றிவளைக்கப்பட்டு இருந்த போலீசார் மீட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து கொண்டு வந்துள்ளார்கள். நெல்லியடி பகுதியில் அடிக்கடி விசித்திரமான நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது