Fri. May 17th, 2024

பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் சீர்கேடு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள மலசல கூடங்கள் துப்பரவு இல்லாத நிலை காணப்படுகின்றதுடன்,  அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவருகிறது.  தண்ணீர் வசதியும் சீரற்ற நிலையில்  காணப்படுகின்றது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் வைத்திய சாலையில் உள்ள அதிகாரிகள் கவனம் இல்லாமல் இருப்பதனால் நோயாளிகள் ஆடைமாற்றும் இடமும்  மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கழிவறை பகுதிகளில்  நோயாளர்கள் நுளம்பின் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும்,  நோயாளர் நலன்புரிசங்கமும்  இதில்  கவனம் எடுக்க வேண்டுமென நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள்  கேட்டுக் கொள்கிறார்கள்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்