வாக்களிக்க வேண்டாம் என அச்சுறுத்தி பெற்றோல் குண்டு வீச்சு
நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என அச்சுறுத்தி பெற்றோல் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் கண்டி கலஹா நில்லம்பல தோட்டப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இப்பகுதியில் உள்ளவர்களை வாக்களிக்க கூடாது எனக் கூறி இனந்தெரியாத நபர்களால் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தற்போது வெளியிட்டுள்ளனர்.