Tue. May 21st, 2024

அவசர உதவி கோரல் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை

மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் கோமா நிலையில் உயிருக்கு போராடும் மகனுடன் பால்மாவுக்கு கூட பணம் இன்றி வறுமையில் வாடும் குடும்பம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் இம்மாணவன் ஆறுமாதங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி தற்போது கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த நிலயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார்.

இரண்டு சகோதரிகளும் ஒரு தம்பியும் கல்வி கற்று வருகிறார்கள். தந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வேலைகள் எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளார்.

தாயார் இவரை பராமரிப்பதில் உள்ளார். இதனால் குடும்பம் எந்தவொரு வருமானமும் இன்றி மிகவும் அல்லல்படுகிறது.

இவருக்கு 3000 பெறுமதியான பால்மா வழங்குமாறு வைத்தியர்கள் பணித்துள்ளார்கள். இதைவிட பழச்சாறுகள் வழங்கவும் கூறியுள்ளனர்.

எனினும் அவற்றை கொள்வனவு செய்து வழங்குவதற்குரிய வசிதிகள் காணப்படவில்லை. தற்போது கால்கள் மட்டும் அசையக்கூடிய நிலையில் சத்துள்ள பானங்களை வழங்கினால் விரைவில் குணமாக முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய குடும்பத்தில் உள்ளவர்களும் ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி அவதிப்படுகிறார்கள். இவர்களது நிலமையினை அறிந்து தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு கோரியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்