சுகாதார துறையினருக்கு எரிபொருள் இன்று எரிபொருள் வழங்கப்படவில்லை
சுகாதார துறையினருக்கு எரிபொருள் இன்று நாடு பூராவும் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு உரிய காலத்தில் எரிபொருள் வழங்கப்படாமையால் சுகாதார துறையினர் காத்திருந்து சென்றுள்ளனர். வடமராட்சி சுகாதார துறையினருக்கு பருத்தித்துறை புலோலி எரிபொருள் நிரப்பு நிலையம் குறிப்பிடப்பட்ட போதிலும் இதுவரை தமக்கு பெற்றோல் வரவில்லை எனவும் பிற்பகல் வருவதற்கான அறிவித்தல்கள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.