நெல்லியடி சுபாஸ் பேக்கரிக்கு சீல்
கோவிட் 19 தொற்று காரணமாக
நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்திற்கு கரவெட்டி சுகாதார பிரிவினரால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார பிரிவினரால் தமது பிரதேசத்திற்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை நெல்லியடி சுபாஸ் வெதுப்பக ஊழியர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்தியதோடு வெதுப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.