Sun. May 19th, 2024

நெல்லியடி மீன் சந்தை, கழிப்பறை திறந்து வைப்பு

நெல்லியடி நவீன மீன் சந்தை மற்றும் கட்டண கழிப்பறை கட்டடத் தொகுதிகள் இன்று  திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச சபை உபதவிசாளர் பொன்னையா, மற்றும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் இணைந்து கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.

 

நவீன முறையில் சுகாதார முறையில் மீன் மற்றும் இறைச்சி என்பன விற்பனை செய்யக்கூடிய முறையில் இச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 30 லட்சம் ரூபா செலவில் இது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்