3வது தடவையாகவும், வடமாகாணம் 1ம் இடம். பாராட்டி கௌரவித்த ஜனாதிபதி.
இலங்கையின் 9 மாகாணங்களில் சீரான நிதி நடவடிக்கைகளுக்கான அங்கீகாரத்தினை வடமாகாணம் 3வது தடவையாகவும் பெற்றிருக்க்கின்றது. 2016ம், 2017ம், 2018ம் ஆண்டுகளில் தொடா்ச்சியாக இந்த அங்கீகாரம் கிடைத்துவருகின்றது.
மாகாணசபைகளின் கீழ் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களின் நிதி நடவடிக்கைகளுக்கான புள்ளியிடப்பட்டு 9 மாகாணங்களுக்கிடையிலும் வெற்றி யாளா் தீா்மானிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான விருதுகளும் வழங்கப்படும் நிலையில்,
2017ம் ஆண்டு நிதி நடவடிக்கைகளுக்காக 95.09 புள்ளிகள் பெற்று 1ம் இடத்தை பெற்ற வடமாகாணம், 2018ம் அண்டு நிதி நடவடிக்கைகளுக்காக 97.75 புள்ளிக ள் பெற்று மீண்டும் 1ம் இடத்தை பெற்றிருக்கின்றது.
இதற்காக கடந்த 28ம் திகதி நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் வடமாகாண அதிகாாிகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கின்றது.