Sun. May 19th, 2024

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களை தாக்கிய 5 பேர் கைது

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அதனுடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் நேற்று 20/20/2020 வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது

அச்சுவேலி தெல்லிப்பளை வீதியில் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பயனின்றி உமிரிழந்துள்ளார்.

இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த ந.றொடிசன் அயன் வயது 34 என்பவரே உயிரிழந்தவராவார்.

இந்த நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.  சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தவர் எவ்வாறு உயிரிழந்தார். என்று என்று கேட்டு அடாவடியில் ஈடுபட்டனர்

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரன் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் அவர்கள் 21/2/2020 வெள்ளிக்கிழமை மாலையாழ்ப்பாணம் நீதிமன்றம் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அரச சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் அவர்கள் ஐந்து பேருக்கும் எதிராக பொலிசார் அறிக்கை தாக்கல் செய்தனர் சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி றெமிடியாஸ் முன்னிலையானார்

குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த பதில் நீதிவான் சந்தேக நபர்கள் 5 பேரையும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் உயிரிழந்தழர்களின் நெருங்கிய உறவினர்கள் என்று மன்றுக்கு சுட்டிக் காட்டப்பட்டது அதனால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அங்கு அவர்களை அழைத்து செல்ல சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்