Sun. May 19th, 2024

ஏற்கனவே திருமணமான கனடா மாப்பிளையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

16.02.2020.அன்று பருத்தித்துறை முனைப் பகுதியில் இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஐந்து வருடங்களுக்கு முன் கனடா மாப்பிள்ளையை திருமணம் செய்திருந்தார். திருமணம் முடித்து ஒரு சில மாதங்களில் மாப்பிள்ளை கனடாவுக்கு  செல்லும்போது,  ஒரு சில மாதங்களில்  உங்களை அங்கே நான் கூப்பிடுவதாக கூறிச்சென்றுள்ளார். கனடா சென்ற பின்னர் கனடாவில் முன்பு திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது கனடாவில் இருந்து கொண்டு மாப்பிள்ளை விவாகரத்து செய்யுமாறு அடிக்கடி தொலைபேசி மூலம் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் தனது உயிரை கயிற்றில் தொங்கியபடி உயிரை மாய்த்துக் கொண்டார்.

குறித்த திருமணம் செய்த பெண்  நற்பண்பும் நற்குணமும் உடையவராக  அக்கிராமத்தில் இருந்துள்ளார் என்று அயலவர்கள் தெரிவிக்கிறார்கள்.  வெளிநாடுகளிலிருந்து வந்து இவ்வாறு பலபேர் ஏமாற்றி திருமணம் செய்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார்கள்.  இதற்கு தரகர்களும் பெற்றோர்களும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளிலுள்ள மாப்பிள்ளைகளை திருமணம்செய்ய பெண்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்து எமற்றி செல்லும் ஆண்களுக்கு பணத்திற்காக புரோக்கர் வேலை செய்யும் புரோக்கர்களை அவதானிக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இது எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்