24 மணித்தியாலத்தில் 90 விபத்துக்கள் 9 பேர் சாவு
கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துகளால் 9 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 90 விபத்துகள் இடம்பெற்றதுடன் இதில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன், இவ்விபத்துகளால் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 221 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை இடம்பெற்ற வாகன விபத்துகளில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.