18 வயது பெண்கள் குண்டு போடுதல் மகாஜனக் கல்லூரி தங்கம்
18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த சி.மரியா ஹர்ஷின் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சி.மரியா ஹர்ஷின் தங்கப் பதக்கத்தையும்,
கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலையைச் சேர்ந்த து.சஜிந்தா வெள்ளிப் பதக்கத்தையும், வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சு.நிதுஜா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.