15 அமைச்சுடன் புதிய அமைச்சரவை கோத்த விடாப்பிடி, தள்ளிப்போன பதவியேற்பு
அமைச்சரவையின் புதிய அரசாங்கம் நாளை (22) பதவியேற்கவுள்ளது என்று இலங்கை பொடுஜனா பெரமுனா
செய்தித் தொடர்பாளர் டல்லாஸ் அலகாபெருமா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது நாளைய தினம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 15 பேர் கொண்ட அமைச்சரவையை தெரிவதில் உள்ள பிரச்சினை காரணமாகவே நாளையத்தினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 15 அமைச்சுகளுக்கு மேல் இல்லை என்று ஜனாதிபதி கடும் நிலைப்பாட்டுடன் இருப்பதனால் இந்த நிலைமை உள்ளதாக தெரியவருகிறது