Tue. May 21st, 2024

சிலாபம் கடற்கரையில் கை குண்டு மீட்பு!

சிலாபம் கடற்கரையில் கை குண்டு ஒன்றை மீனவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாா் மீட்டி ருக்கின்றனா்.

கடற்படை முகாமிற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ள கடற்கரையிலிருந்து இந்த கைக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற நபர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த கைக்குண்டு இன்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு கடற்கரையில் சிறிய பொதியொன்றின் மீது காணப்பட்டுள்ள நிலையில்,

கடற்கரையை சுத்தம் செய்யும் போது மீனவரால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸாரால் இராணுவத்தின் விசேட அதிரடிப்பிரிவின்

குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்