Tue. May 21st, 2024

பாடசாலை மாணவி விபத்தில் படுகாயம்! விபத்தை ஏற்படுத்தியவருக்கு விளக்கமறியல்.

கொக்குவில்- பூநாறி மடத்தடியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவா் படுகா யமடைந்துள்ளாா்.

மேலும் இவ் விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறிப்பிட்டமையாவது பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற மாணவி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளார்.

மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த ஆசிரியரால் ஓட்டோவொன்றில் அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன் போது அவரை சகோதரி எனக் குறிப்பிட்ட ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் பொலிசார் ஆசிரியரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஆஜர்படுத்தினர்.

இதன் போது நீதவான் ஏ. பீற்றர் போல் நீங்கள் ஆசிரியராக உள்ள போதும் பொலிசாருக்கு அறிவித்து உரிய விசாரணை நடத்தாமல் பொறுப்பற்ற வகையில் அங்கிருந்து சென்றுள்ளார்கள் என கண்டித்து

அவரை 27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்