Sat. May 18th, 2024

1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் ஒருநாளில் பிடிபட்ட அதிசயம்

தலவில பகுதியில் உள்ள நாத்தாண்டியா, மராவிலவில பகுதியில் ரூ .1 கோடி மதிப்புள்ள மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்படுள்ளது பிடிபட்டன.

சுமார் 270 தொன் நிறையுடைய மீன்கள் இந்த கடல் பகுதிகளில் பிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்த மீன்கள் 78 கிலோ நிறையுடைய சுமார் 3500 மீன் கொள்கலன்களில் விற்கப்பட்டதாகவும் , ஒவ்வொரு கொல்கலனும் ரூபாய் 2500 க்கும் 3500 க்கும் இடையில் விற்கப்பட்டதாகவும் தெரியவருகிறது

மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் இப்பகுதியை நிரப்பினதுடன் , ஏராளமான மக்கள் மீன் வாங்கவும் இந்த சம்பவத்தை காணவும் வருகை தந்திருந்தனர்.
பெரிய கொள்கலன்களில் மீன்கள் ஏற்றப்பட்டு ட்ராக்டர்கள் மூலம் கடற்கரையோரம் வழியாக இழுத்து செல்லப்பட்டு அவை லொரிகளில் ஏற்றப்பட்டன.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்