Sat. May 18th, 2024

ஆவா குழு ரவுடிகள், கொள்ளைகாரா்களை இலக்குவைத்து பாாிய சுற்றிவளைப்பு. இன்று நல்லுாாில்.

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள், வழிப்பறி கொள்ளைகள் தொடா்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலை யில் கொள்ளையா்களை கண்டறிய இன்று பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்.நல்லுாா் பகுதியில் இராணுவம், பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப்படையினா் குவிக்கப்பட் டு இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர், வடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்திருந்தனர். இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் சில வீடுகளும் சோதனையிடப்பட்டன.

பொலிஸார் இந்த நடவடிக்கையை குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த எனத் தெரிவிக்கும் போதும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இதனால் பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையினை இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்