ஆவரங்கால் வாள்வெட்டு சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது, மேலும் இருவரைத்தேடி வலைவீச்சு
21 5 2019 இன்று காலை ஆவரங்கால் பகுதியில் அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற போலீசார் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் காயப்பட்டு இருக்கும் இளைஞனை தாக்கிய பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளார்கள். அவரைத் தொடர்ந்து இன்னும் இரு சந்தேக நபர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றார்கள். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விசாரணையின் பின் இன்று நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட இருக்கின்றார் என அச்சுவேலி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்